சிரேஷ்ட ஊடகவியலாளர், அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அஸாம் காலமானார்!

Date:

புத்தளத்தை பிறப்பிடமாகக் கொண்ட ,எழுத்தாளரும் நூலாசிரியரும் ஊடகவியலாளரும் அல்ஹசனாத்,எங்கள் தேசம் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியவருமான அஷ்ஷெய்க் R .அப்துல்லாஹ் அஸாம் அவர்கள் இன்று கொழும்பில் காலமானார்.

பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்தவரும், பல எழுத்தாளர்களை எழுத்துத் துறைக்கு கொண்டு வருவதற்கு பங்களிப்பு செய்தவரும், பன்முக ஆளுமை கொண்டவருமான இவர், தமிழ் மொழி மூலமான பல நூல்களும், ஆக்கங்களும் வெளிவருவதற்கு நீண்ட காலமாக பங்களிப்பு செய்துள்ளார்.

குர்ஆனிய கலைகள் தொடர்பான இவருடைய நூல் தமிழ் உலகில் மிகவும் பிரபலமானதாகும். அன்னாரின் மறைவையொட்டி “நியூஸ் நவ்” தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து, அவருடைய கப்றுடைய வாழ்வை ஒளிமயமானதாக ஆக்கி விடுவாயாக!

அவருடைய இழப்பை தாங்கும் சக்தியை அவருடைய குடும்பத்தினருக்கும், நெருங்கியவர்களுக்கும் அல்லாஹ் வழங்குவானாக! இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்…

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...