தினேஷ் ஷாஃப்டரின் மர்ம மரணம் தொடர்பில் எரான் விக்ரமரத்ன கேள்வி!

Date:

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

மறைந்த தொழிலதிபரின் குடும்பத்திற்கு நீதி கிடைக்காவிட்டால் எந்தவொரு வெளிநாட்டு முதலீட்டாளரும் இலங்கைக்கு வரமாட்டார்கள், விசாரணைகளை நடத்திய நீதி மருத்துவ அதிகாரியின் நடத்தை தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“பாதிக்கப்பட்டவர் கழுத்தை நெரித்து கொல்லப்பட்டதாக ஆரம்ப நீதி மருத்துவ அதிகாரி அறிக்கை கூறியது. இருப்பினும், பாதிக்கப்பட்டவர் தற்கொலை செய்து கொண்டதாக அதே நீதி மருத்துவ அதிகாரி பின்னர் தெரிவித்தார்.. இது எப்படி முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்  “வெளிநாட்டு வணிகர்கள் பொதுவாக உள்ளூர் முதலீட்டாளர்களால் அழைக்கப்படுவார்கள். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உண்மையில் தங்கள் உள்ளூர் சகாக்களுடன் வேலை செய்கிறார்கள்.

எனவே, தமது உள்ளூர் சகாக்கள் பாதுகாப்பாக இல்லை என உணர்ந்தால், வெளிநாட்டு முதலீடுகளைப் பெறுவது பற்றி இலங்கை சிந்திக்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷாஃப்ட்டர் குடும்பம் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர்கள் என்பதால் இந்த வழக்கை ஜனாதிபதி கவனிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...