துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் பின்னர் பல நாட்களாக காணாமல் போயிருந்த இலங்கைப் பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்று (12) மதியம் அவரது உடலை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் மற்றும் மீட்பு குழுவினர் கண்டெடுத்தனர்.
அதன்படி, அவரது சடலம் அவரது மகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு துருக்கிக்கு விஜயம் செய்தார்.
கலகெதரவில் பிறந்த பெண்ணான இவர் இறக்கும் போது 69 வயதாகும். இச்சம்பவம் தொடர்பாக, துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம், உயிரிழந்த பெண்ணின் மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.