‘துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்’

Date:

துருக்கி மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதிகளில் அடுத்தடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர்சேதங்கள் மற்றும் பேரழிவுகளுக்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த கவலையையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதேவேளை பாதிக்கப்பட்ட மக்கள் கூடிய விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்றும் அதற்கான தைரியத்தையும் மன வலிமையையும் அல்லாஹு தஆலா அவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறோம்.

அப்பகுதி வாழ் மக்களின் உயிர்களையும் உடைமைகளையும் பாதுகாத்து சந்தோஷத்தையும் முழுமையான சுதந்திரத்தையும் அம்மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உளமாரப் பிரார்த்தனை செய்கிறோம்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி புரிய முன்வருமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்வதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழான முதியோர்...

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்; ‘தார்மீக கோழைத்தனம்’ என காங்கிரஸ் விமர்சனம்

இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை இந்தியாவின் எதிர்க்கட்சிகள்...

சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு: பரீட்சைக்குப் பின் மோதல்களைத் தவிர்க்க நடவடிக்கை

கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த O/L பரீட்சை இன்று (26) நிறைவடையவுள்ளது. O/L...

பிரதமர் மோடி, இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய கௌரவமான ‘Speaker of the Knesset Medal’ஐ பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நேற்று அவர் அந்நாட்டு...