தேசிய சமாதானப் பேரவையின் இரத்தினபுரி மாவட்ட சர்வ மதக்குழு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம்

Date:

தேசிய சமாதான பேரவையின் இரத்தினபுரி மாவட்ட சர்வமதக்குழு கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளது.

அதற்கமைய தேசிய சமாதானப் பேரவையின் இரத்தினபுரி மாவட்டம் கொடகவெல மற்றும் இறக்குவான பிரதேச சர்வ மதக் குழு உறுப்பினர்கள் இன நல்லிணக்க பரிமாற்று நல்லுறவுக்கான விஜயமாக கிழக்கு மாகாணத்திற்கு சென்றுள்ளனர்.

இன நல்லிணக்க பரிமாற்று நல்லுறவுக்காக கிழக்கு மாகாணத்திற்கு வருகை தந்துள்ள சர்வ மத குழு உறுப்பினர்கள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி அல் அக்‌ஷா பள்ளிவாசலில்  சர்வமதக்குழு அங்கத்தவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

மட்டக்களப்பு பிரதேச சர்வ மத குழு இணைப்பாளரும், மட்டக்களப்பு வண்ணத்துப் பூச்சி சமாதான பூங்கா திட்ட முகாமையாளருமான து. நகுலேஸ்வரன் ஏற்பாட்டில் காத்தான்குடி அல் அக்‌ஷா பள்ளிவாசலில் இடம்பெற்ற கலந்துரையாடலில் காத்தான்குடி பிரதேச செயலாளர் உதய ஸ்ரீதரும் பங்கேற்றார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...