தேர்தலுக்கு நிதி வழங்குவதில் பாரிய சிக்கல்கள் உள்ளன: நிதி அமைச்சின் செயலாளர்

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியினை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

நிதியமைச்சின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் இன்று(வெள்ளிக்கிழமை) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போதே அவர்கள் இதுகுறித்து அறிவித்துள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, நாட்டில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்க முடியும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தியாவசியமற்ற அனைத்து செலவுகளுக்கும் நிதி அமைச்சரின் ஒப்புதல் அவசியம் என மற்றொரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி வழங்குவதில் சிக்கல்கள் இருப்பதாக நிதிச் செயலாளர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...