தேர்தலுக்கு நிதி வழங்குவதில் பாரிய சிக்கல்கள் உள்ளன: நிதி அமைச்சின் செயலாளர்

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான நிதியினை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் இருப்பதாக நிதி அமைச்சின் செயலாளர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

நிதியமைச்சின் செயலாளர் மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகள் இன்று(வெள்ளிக்கிழமை) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போதே அவர்கள் இதுகுறித்து அறிவித்துள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

அரசாங்க செலவினங்களைக் குறைப்பதற்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, நாட்டில் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்க முடியும் என நிதி அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தியாவசியமற்ற அனைத்து செலவுகளுக்கும் நிதி அமைச்சரின் ஒப்புதல் அவசியம் என மற்றொரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய நிலவரப்படி நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நிதி வழங்குவதில் சிக்கல்கள் இருப்பதாக நிதிச் செயலாளர் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...