தேர்தல் பணிகளுக்கு எரிபொருள் கேட்டு ஒரு மாதமாகியும் பதில் இல்லை: தேர்தல் ஆணைக்குழு

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு எரிபொருள் கிடைக்கும் வகையில் ‘OR’ அமைப்பை தயாரிப்பதற்கு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு தேவையான அமைப்பை தயார் செய்யுமாறு அமைச்சின் செயலாளரிடம் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் கோரிக்கை விடுக்கப்பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் அவற்றிற்கு தேவையான எரிபொருளின் அளவு விபரங்கள் அடங்கிய அறிக்கை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வாகனம் ஒன்றிற்கு அதிகபட்சமாக 100 லீற்றர் எரிபொருள் கோரப்படுவதாகவும், தேர்தலில் பயன்படுத்தப்படும் வாகனங்களில் ஒரு பகுதிக்கு மாத்திரமே இவ்வளவு அதிகபட்ச எரிபொருள் தேவைப்படுவதாகவும்  ஆணைக்குழுவின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி, தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவது அரச நிறுவனங்களின் அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றார்

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...