பதவி விலகினார் மயந்த திஸாநாயக்க!

Date:

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து தாம் விலகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் சபாநாயகருக்கு இன்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற தெரிவுக்குழு கூட்டத்தில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக மயந்த திஸாநாயக்கவை ஆளும் கட்சி முன்மொழிந்தது. அந்த பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்தது.

எனினும், ஆளுங்கட்சியினரால் பரிந்துரைக்கப்பட்ட மயந்த திஸாநாயக்க பெரும்பான்மை வாக்குகள் மூலம் அரசாங்க நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக தெரிவானார். பின்னர், இந்த விடயம் பாராளுமன்றத்திலும் பொது வெளியிலும் பேசு பொருளானது.

இந்த நிலையில், மயந்த திஸாநாயக்க குறித்த பதவியிலிருந்து விலகும் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...