பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த வைத்தியர் கைது!

Date:

பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 44 வயதுடைய வைத்தியர் ஒருவர் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் காப்சூல்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் பதுளையில் தனது தனியார் மருத்துவமனையில் பாடசாலை மாணவர்களுக்கு மருந்துகளை விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

அதன்படி, பதுளை பகுதியில் காரில் பயணித்துகொண்டிருந்த வைத்தியரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

செல்லுபடியாகும் உரிம பத்திரம் இல்லாமல் 145 போதை மருந்து உட்செலுத்தப்பட்ட காப்ஸ்யூல்கள் மருத்துவரிடம் இருப்பதை அதிரடிப்படையினர் கண்டறிந்துள்ளனர்.

குறித்த வைத்தியர் இன்று பெப்ரவரி 15 ஆம் திகதி பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...