பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த வைத்தியர் கைது!

Date:

பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 44 வயதுடைய வைத்தியர் ஒருவர் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் காப்சூல்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியர் பதுளையில் தனது தனியார் மருத்துவமனையில் பாடசாலை மாணவர்களுக்கு மருந்துகளை விற்பனை செய்வதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

அதன்படி, பதுளை பகுதியில் காரில் பயணித்துகொண்டிருந்த வைத்தியரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

செல்லுபடியாகும் உரிம பத்திரம் இல்லாமல் 145 போதை மருந்து உட்செலுத்தப்பட்ட காப்ஸ்யூல்கள் மருத்துவரிடம் இருப்பதை அதிரடிப்படையினர் கண்டறிந்துள்ளனர்.

குறித்த வைத்தியர் இன்று பெப்ரவரி 15 ஆம் திகதி பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...