புதிய பரிந்துரைகளின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை பெற்ற ஆசியாவின் முதல் நாடு!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் வசதி மற்றும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஆகியவற்றின் கீழ் 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க பங்களாதேஷின் கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம்  ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த நிதியில் 476 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக வழங்கவுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம்  அறிவித்துள்ளது.

இந்த வாய்ப்பை பெற்ற முதல் ஆசிய நாடு பங்களாதேஷ் என்பதும் சிறப்பம்சமாகும்.

42-மாத வேலைத்திட்டத்தின் போது, ​​சீர்திருத்தங்கள் பாதிக்கப்படக்கூடியவர்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துவதற்கும், பசுமை வளர்ச்சியை வளர்ப்பதற்கும் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதுகாக்க சமூக மேம்பாட்டு செலவினங்களை செயல்படுத்துவதற்கு நிதி இடத்தை உருவாக்குவதற்கும் இது உதவுகிறது என்று  சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

“சுதந்திரத்திற்குப் பிறகு, பங்களாதேஷ் வறுமையைக் குறைப்பதிலும், வாழ்க்கைத் தரத்தை கணிசமாக மேம்படுத்துவதிலும் நிலையான முன்னேற்றம் கண்டுள்ளது.

இருப்பினும், கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் உக்ரைனில் ரஷ்யாவின் அடுத்தடுத்த போர் ஆகியவை இந்த நீண்ட கால வலுவான பொருளாதார செயல்திறனில் குறுக்கீடு செய்தன.

இந்த பல பிரச்சனைகள் காரணமாக பங்களாதேஷின் மேக்ரோ பொருளாதார மேலாண்மை சவாலானதாக மாறியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

அமைச்சர் விஜித ஹேரத் ஜேர்மனிக்கு விஜயம்

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித்த ஹேரத் நாளை...

புதிய 3 நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் கையளிப்பு

நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் நேற்று (24) முற்பகல் ஜனாதிபதி...

எவன்கார்ட் நிறுவனத்தின் மனுக்கள் விசாரணை இன்றி தள்ளுபடி

எவன்கார்ட் நிறுவனம் நடத்தி வந்த மூன்று ஆயுதக் களஞ்சியங்களை அகற்றுமாறு பாதுகாப்பு...

விபச்சாரத்துக்கு தூண்டுதலாக அமையும் ஸ்பா (Spa) நிலையங்களை மூடுவதற்கு புத்தளம் மாநகர சபை தீர்மானம்

புத்தளம் மாநகர சபையின் நேற்றைய (24) அமர்வின்போது, மக்கள் நலனை முன்னிறுத்தி...