பொரளையில் பெண்ணொருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம்: இராணுவத்தினர் இருவர் கைது!

Date:

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேஸ்லைன் மாவத்தை, சஹஸ்புர பிரதேசத்தில் பகுதியில் நேற்று (13) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக் காயத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது அருகில் இருந்த குறித்த பெண் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சஹஸ்புர பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தினால் குறித்த இராணுவ வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...