‘முஸ்லிம்களை வாழ விடு’:காத்தான்குடியில் பள்ளிவாசலை விடுவிக்கக் கோரி சாத்வீகப்போராட்டம்!

Date:

பொலிசார் கையகப்படுத்திய பள்ளிவாசலை விடுவிக்கக் கோரி அறவழி சாத்வீகப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (06) பள்ளிவாசல் முன்றலில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டது.
புதிய காத்தான்குடி, கப்பல் ஆலிம் வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசலை பொலிசார் கையகப்படுத்தியதற்கு, எதிர்ப்புத் தெரிவித்தும், பள்ளிவாசலை  மீளப்பெற்றுத்தரக் கோரியும்  இந்த போராட்டம் இடம்பெற்றது.

காத்தான்குடி கப்பல் ஆலிம் வீதியில் இருக்கும் தாருல் அதர் பள்ளிவாசல் நீண்ட காலமாக மூடி தடை செய்யப்பட்டிருந்தது.

தற்போது அந்த இறை இல்லத்தை இலங்கை பொலிஸ் தினைக்களம் அத்துமீறி பொலிஸாரின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிராந்திய காரியாலயமாக மாற்ற முடிவு செய்துள்ளார்கள்.

இதன்போது காத்தான்குடி முழுவதும் வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது சந்தைகள் என்பவற்றை மூடி எதிர்ப்பைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

நன்றி:எம்.பஹ்த் ஜுனைட்

Popular

More like this
Related

நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்புகளுக்கு சிவப்பு எச்சரிக்கை !

காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த...

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் தூதுவருடன் அமைச்சர் நலிந்த சந்திப்பு

தொழுநோய் ஒழிப்பிற்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) நல்லெண்ண தூதுவர் யோஹெய்...

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நோக்கிச் சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று...

நாட்டின் பல பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல்  மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை ,...