மைத்திரி – தயாசிறிக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு !

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (21) இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஜா-எல பிரதேச சபையின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர், சமாலி பெரேராவுக்குப் பதிலாக, வேறொருவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதை தடுத்தமை தொடர்பில்,  நீதிமன்றம்  இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையுமின்றி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புக்கு முரணாக, தம்மை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, அதற்குப் பதிலாக வேறொருவரை நியமிக்க தயாராகுவதாக தெரிவித்து, மனுதாரர் குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இதற்கமைய, பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை, அடுத்த மாதம் 3 ஆம் திகதிவரை, அமுலில் இருக்கும் என கொழும்பு மாவட்ட நீதவான் பூர்ணிமா பரணகமகே உத்தரவிட்டுள்ளர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...