மைத்திரி – தயாசிறிக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு !

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (21) இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஜா-எல பிரதேச சபையின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர், சமாலி பெரேராவுக்குப் பதிலாக, வேறொருவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதை தடுத்தமை தொடர்பில்,  நீதிமன்றம்  இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கையுமின்றி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புக்கு முரணாக, தம்மை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி, அதற்குப் பதிலாக வேறொருவரை நியமிக்க தயாராகுவதாக தெரிவித்து, மனுதாரர் குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இதற்கமைய, பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை, அடுத்த மாதம் 3 ஆம் திகதிவரை, அமுலில் இருக்கும் என கொழும்பு மாவட்ட நீதவான் பூர்ணிமா பரணகமகே உத்தரவிட்டுள்ளர்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...