வீதியை மறித்த தொழிற்சங்கத்தினர்: கொழும்பு கோட்டையில் இராணுவம் குவிப்பு!

Date:

கொழும்பு – புறக்கோட்டை புகையிரத நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் தமது போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.

அத்துடன் போராட்டக்காரர்கள் அங்கிருந்து அமைதியான முறையில் கலைந்து சென்றுள்ளனர்.

இதேவேளை உலக வர்த்தக மைய கட்டடப் பகுதி மற்றும் ஜனாதிபதி செயலகப் பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

புறக்கோட்டை புகையிரத நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலக பகுதியை நோக்கி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை புறக்கோட்டை புகையிரத நிலையம் முன்பாக போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்ட பிரதான வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

கொழும்பு – புறக்கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களுக்கு நீதிமன்ற உத்தரவினை பொலிஸார் வாசித்துக் காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் பிரதான வீதியை மறிக்காமல் போராட்டத்தை தொடருமாறு பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய போதும் போராட்டக்காரர்கள் அதனை நிராகரித்து வீதியை மறித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு நீர்த்தாரை பிரயோக வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்களை சமரசம் செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் அப்பகுதியில் கடுமையான பதற்ற நிலை நிலவி வருகிறது.

Popular

More like this
Related

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதித் தலைவர் தாரிக் ரஹ்மான்- அமைச்சர் விஜித ஹேரத் இடையில் சந்திப்பு.

பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் பிரதமர் கலேதா ஜியாவின்...

நியூ யார்க் மேயராக மம்தானி பதவியேற்பு:குர்ஆன் மீது சத்தியப்பிரமாணம்

நியூயார்க் நகரின் மேயராக சேர்ந்த ஸோரான் மம்தானி வியாழக்கிழமை அதிகாலை பதவியேற்றுக்...

போக்குவரத்து வசதியற்ற 40 கிராமிய வீதிகளில் இன்று முதல் பஸ் சேவை ஆரம்பம்!

இதுவரை பஸ் போக்குவரத்து வசதிகள் இல்லாத, பொருளாதார ரீதியாக இலாபமற்ற 40...