வீதியை மறித்த தொழிற்சங்கத்தினர்: கொழும்பு கோட்டையில் இராணுவம் குவிப்பு!

Date:

கொழும்பு – புறக்கோட்டை புகையிரத நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினர் தமது போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.

அத்துடன் போராட்டக்காரர்கள் அங்கிருந்து அமைதியான முறையில் கலைந்து சென்றுள்ளனர்.

இதேவேளை உலக வர்த்தக மைய கட்டடப் பகுதி மற்றும் ஜனாதிபதி செயலகப் பகுதிகளில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

புறக்கோட்டை புகையிரத நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலக பகுதியை நோக்கி செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை புறக்கோட்டை புகையிரத நிலையம் முன்பாக போராட்டக்காரர்களால் மறிக்கப்பட்ட பிரதான வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

கொழும்பு – புறக்கோட்டை புகையிரத நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களுக்கு நீதிமன்ற உத்தரவினை பொலிஸார் வாசித்துக் காட்டி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் பிரதான வீதியை மறிக்காமல் போராட்டத்தை தொடருமாறு பொலிஸார் போராட்டக்காரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய போதும் போராட்டக்காரர்கள் அதனை நிராகரித்து வீதியை மறித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு நீர்த்தாரை பிரயோக வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டக்காரர்களை சமரசம் செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் அப்பகுதியில் கடுமையான பதற்ற நிலை நிலவி வருகிறது.

Popular

More like this
Related

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதியோர் கொடுப்பனவு வங்கிக் கணக்குகளில்!

பெப்ரவரி மாதத்திற்கான ‘அஸ்வெசும’ முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழான முதியோர்...

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்; ‘தார்மீக கோழைத்தனம்’ என காங்கிரஸ் விமர்சனம்

இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையை இந்தியாவின் எதிர்க்கட்சிகள்...

சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு: பரீட்சைக்குப் பின் மோதல்களைத் தவிர்க்க நடவடிக்கை

கடந்த 17ஆம் திகதி ஆரம்பித்த O/L பரீட்சை இன்று (26) நிறைவடையவுள்ளது. O/L...

பிரதமர் மோடி, இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய கௌரவமான ‘Speaker of the Knesset Medal’ஐ பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். நேற்று அவர் அந்நாட்டு...