27வது ‘மஸ்கட் சர்வதேச புத்தக கண்காட்சி’ ஆரம்பமாகியது!

Date:

ஓமான், மஸ்கட்டில் சர்வதேச புத்தகக் காட்சி  நேற்று (22) தொடக்கம் எதிர்வரும் மார்ச் மாதம் (04) வரை Oman convention and exhibition centreல் நடைபெறவுள்ளது.

புத்தகக் கண்காட்சியின் தொடக்க விழா நேற்று  உள்துறை அமைச்சர் சையத் ஹமூத் பைசல் அல் புசைதி தலைமையில் நடைபெற்றது.

இந்த கண்காட்சியில் 32 நாடுகளைச் சேர்ந்த 826 பதிப்பகங்கள் கலந்து கொள்கின்றன.

அதேநேரம் 260,614 அறபு மொழியிலான நூல்களும் 204,411 பிற மொழியிலான வெளிநாட்டு நூல்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு 165 கலாசார நிகழ்ச்சிகளும் 166 சிறுவர் நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மிகப் பிரமாண்டமாக நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. வாசிப்பு அருகிவரும் சூழலில் இத்தகைய நிகழ்வுகள் பாராட்டத்தக்கது.

அதிலும் குறிப்பாக அரபு நாடு ஒன்றில் இத்தகைய நிகழ்வு நடைபெறுவதானது வாசிப்புக்கு அந்த சமூகம் கொடுக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது.

 

Popular

More like this
Related

டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் 50,000 ஐத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப்...

தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தரம் 6 இல்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு குவைத் தலைவர்கள் இரங்கல்.

குவைத் நாட்டின் தலைவர்கள் டிட்வா புயல்தாக்கத்தினால் துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு...

இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர நிவாரண திட்டத்தை ஆரம்பித்து வைக்கிறது கத்தார் செரிட்டி.

அபிவிருத்திக்கான கத்தார் நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் இலங்கைக்கான கத்தார் அரசின் தூதரகத்துடன்...