T20 மகளிர் உலக கிண்ணம் : அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது!

Date:

T20 மகளிர் உலக கிண்ணம் கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியா-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டொஸ் வென்று முதலில் ஆடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது.

அதிரடியாக ஆடிய பெர்த் மூனே 54 ரன்கள் விளாசினார். இதையடுத்து, 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

டாப் ஆர்டர் வீராங்கனைகள் ரன் குவிக்க தவறிய நிலையில் கடுமையாக போராடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 43 ரன்களும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 52 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர்.

எனினும், மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால் இந்திய அணியால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களே எடுக்க முடிந்தது.

இதனால், அவுஸ்திரேலிய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அத்துடன், தொடர்ந்து 7வது முறையாக T20 மகளிர் உலக கிண்ணம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

Popular

More like this
Related

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு முற்பணம் கொடுப்பனவு!

அரசாங்க உத்தியோகத்தர்களுக்குப் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 4,000 ரூபா விசேட முற்பணம்...

வெளிநாட்டு இலங்கையர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: நவம்பரில் 673.4 மில். டொலர் பதிவு

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணம், நவம்பர் மாதத்தில் 673.4...

டெங்குவை ஒழிக்க விசேட வேலைத்திட்டம்

மழையுடனான வானிலை காரணமாக டெங்கு பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு...

அனர்த்த நிவாரணத்துக்கு பங்களிப்பு செய்த கொழும்பு பெரிய பள்ளிவாசல்!

தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல்...