Update: ஒன்றுதிரண்ட 5,000 பௌத்த பிக்குகள்! பாராளுமன்றத்திற்கு வெளியே பதற்றம்!

Date:

பாராளுமன்றத்துக்கு வெளியே பெரும் திரளான பௌத்த பிக்குகள் ஒன்றிணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக அங்கு பதற்றமான நிலை உருவாகியுள்ளது.

பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி நாடாளுமன்றில் அவர்கள் நுழைய முற்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

9ஆவது பாராளுமன்றத்தின் 4ஆவது கூட்டத்தொடர் இன்று இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது இவ்வாறு அரசுக்கு எதிராக பௌத்த பிக்குகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தை நீக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி, சுமார் ஐயாயிரம் பௌத்த பிக்குகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...