ஆணையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள உள்ளூராட்சி மன்றங்கள்!

Date:

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னதாக நடத்துவதற்கு சாத்தியம் இல்லை எனவும், அதற்கமைய உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தும் விசேட ஆணையாளர்களுக்கு கீழ் கொண்டுவரப்படும் எனவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வருடத்திற்கு பிற்போடப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரக் காலம் மார்ச் 19ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளதால், மார்ச் 9ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்நிலையில், தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதியை அரசாங்கம் வழங்காததன் காரணமாக தேர்தல் பிற்போடப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே, மார்ச் 19ஆம் திகதியுடன் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரக்காலம் நிறைவுக்கு வருகிறது.

எனவே, தேர்தலொன்று நடைபெறும் வரையில் மாநகர சபைகளை நகர ஆணையாளர்களுக்கு கீழும், நகரசபை மற்றும் பிரதேச சபைகளுக்கான அதிகாரங்களை பிரதேச சபை செயலாளர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆணையாளர்களின் கீழ் உள்ளூராட்சி மன்றங்கள் கொண்டுவரும் பட்சத்தில் தற்போதைய உறுப்பினர்களின் பதவிகள் செயலிழக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...