எரிவாயு விலை அதிகரிப்பால் ஹோட்டல் உணவுகள் அதிகரிக்குமா? தீர்மானம் இன்று

Date:

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரித்த நிலையில் லாஃப் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுமா இல்லையா என்பது இன்று அறிவிக்கப்பட உள்ளது.

இது தொடர்பில் தமது நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இன்று கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக லாஃப் கேஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச் வாகபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதேநேரம் எரிவாயு விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது உணவு மற்றும் பானங்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

எரிவாயு விலை அதிகரிப்பால் பேக்கரி தொழில்துறை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் 12 கிலோ 5 லீற்றர் எரிவாயு சிலிண்டரின் விலை 334 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12 கிலோ 5 லீற்றர் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,743 ரூபாவாக அதிகரித்துள்ளது.

5 கிலோகிராம் வகை எரிவாயு சிலிண்டரின் விலை 134 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன் அதே சிலிண்டரின் புதிய விலை 1,904 ரூபாவாகும்.

2 கிலோ 3 தசம வகை எரிவாயு சிலிண்டரின் விலை 61 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த சிலிண்டரின் புதிய விலை 883 ரூபாயாக அதிகரித்துள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...