கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ரணில், சீன ஜனாதிபதியுடன் தொலைபேசி உரையாடல்?

Date:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடன் மறுசீரமைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளின் எதிர்காலம் குறித்து ஜி ஜின்பிங் விவாதிக்க உள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு இருதரப்பு கடன் வழங்குவதில் அதிக அளவில் உள்ளன.

சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF)  2.9 பில்லியன் திட்டத்தை அமுல்படுத்த அவர்களின் உத்தரவாதங்கள் முக்கியமாகும்.

(EXIM) எக்சிம் வங்கியின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் கடன்களுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.

எவ்வாறாயினும் , இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் துணை இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலாண்ட் இந்தியா சாதகமான உத்தரவாதத்தை வழங்கியதாகவும் ஆனால் சீனா வழங்கியது சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிலைத்தன்மையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்றும் கூறினார்.

சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், அமெரிக்க துணைச் செயலாளரின் கருத்துகள் உண்மையைப் பிரதிபலிக்கவில்லை என்று கூறினார்.

ஒரு நட்பு அண்டை நாடு மற்றும் உண்மையான நண்பன் என்ற வகையில், சீனா இலங்கை எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் சவால்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு சீனாவின் திறன்களுக்கு சிறந்த உதவிகளை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

பேரிடரால் சேதமடைந்த மத ஸ்தலங்களை கட்டியெழுப்ப ஹஜ் குழுவிடமிருந்து ரூ. 5 மில். நன்கொடை

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களின் மறுசீரமைக்கும் பணிகளுக்காக,...

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை எதிர்பார்ப்பு

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு, குறிப்பாக பெப்ரவரி 10 வரை கனமழை...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,தெற்கு மற்றும் சப்ரகமுவ...

பேரிடரால் பாதிக்கப்பட்ட தொழில்துறைக்கு ரூ. 200,000 வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர...