சவூதி மண்ணில் முதன்முறையாக வளைகுடா இலங்கையர்களுக்கான கால்பந்து கிண்ணம்!

Date:

சவூதி ரியாதில் வளைகுடா இலங்கையர்களுக்கான கால்பந்து கிண்ணத்துக்கான போட்டிகள்  (gulf lankans challenge TROPHY)  நடைபெற்றது.

நேற்றைய தினம் (24)  ரியாத் சொக்கர் பிரக்டீசஸ் (RIYADH SOCCER PRACTICES), கழகத்தின் ஏற்பாட்டில் டெர்பி உதைப்பந்தாட்ட மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த போட்டி நிகழ்ச்சியின் விசேட அதிதியாக சவூதி இலங்கை தூதரகத்தின் தூதுவர் பாக்கீர் எம். அம்ஸா மற்றும் அதிதிகளாக இலங்கைக்கான சவூதி கலாசார அமைப்பின்  அங்கத்தர்களான எம். நிஹால், கமகே  ரியாஸ் யூசுப், ரொமமேஷ் பெரேரா, சசிகுமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இப்போட்டிகள் 14 வயதுக்குட்பட்ட மற்றும் வளர்ந்தவர்களுக்கான போட்டடிகள் நடைபெற்றன.

Riyadh SOCCER Practices, KSA மற்றும் Matrix Sports Academy Doha Qatar அணிகளுக்கு இடையிலான போட்டியின் முதலாவது  போட்டியில் 14 வயதின் கீழ் மாணவர்கள் விளையாடி ஒன்பதுக்கு ஐந்து என்ற கோல் கணக்கில் Riyadh SOCCER Practices, KSA அணி வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

அடுத்த போட்டியாக 14 வயதின்கீழ் ஜூனியர் பிரிவு போட்டியில் Matrix Sports Academy Doha Qatar ஐந்துக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான விருதை லியாத் இம்தியாஸ் மற்றும் சிறந்த கோல் காப்பாளருக்கான விருதை அம்ரிஷ் சதீஷ், ஷயான் கமில் என இருவரும் பெற்றுக் கொண்டனர்.

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...