சிரேஷ்ட ஊடகவியலாளர், அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அஸாம் காலமானார்!

Date:

புத்தளத்தை பிறப்பிடமாகக் கொண்ட ,எழுத்தாளரும் நூலாசிரியரும் ஊடகவியலாளரும் அல்ஹசனாத்,எங்கள் தேசம் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியவருமான அஷ்ஷெய்க் R .அப்துல்லாஹ் அஸாம் அவர்கள் இன்று கொழும்பில் காலமானார்.

பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம் வாய்ந்தவரும், பல எழுத்தாளர்களை எழுத்துத் துறைக்கு கொண்டு வருவதற்கு பங்களிப்பு செய்தவரும், பன்முக ஆளுமை கொண்டவருமான இவர், தமிழ் மொழி மூலமான பல நூல்களும், ஆக்கங்களும் வெளிவருவதற்கு நீண்ட காலமாக பங்களிப்பு செய்துள்ளார்.

குர்ஆனிய கலைகள் தொடர்பான இவருடைய நூல் தமிழ் உலகில் மிகவும் பிரபலமானதாகும். அன்னாரின் மறைவையொட்டி “நியூஸ் நவ்” தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது.

யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து, அவருடைய கப்றுடைய வாழ்வை ஒளிமயமானதாக ஆக்கி விடுவாயாக!

அவருடைய இழப்பை தாங்கும் சக்தியை அவருடைய குடும்பத்தினருக்கும், நெருங்கியவர்களுக்கும் அல்லாஹ் வழங்குவானாக! இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்…

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...