‘சில உணவகங்களில் மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுகள் வழங்கப்படுகின்றன’

Date:

இலங்கையில் உள்ள உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் 18 சதவீதமானவை மனித பாவனைக்குத் தகுதியற்ற உணவுகளை வழங்குவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் 55 வீத உணவகங்களில் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும், 27 வீதம் திருப்திகரமான நிலையில் இருப்பதாகவும் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் தொடர்பாக சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த புள்ளிவிபரங்கள் அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

தரவுகளின்படி, A பிரிவில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் 55%ம், B பிரிவில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் 27%ம், மற்றும் C பிரிவில் திருப்தியற்ற நிலையில் 18 சதவீதமான ஹோட்டல் மற்றும் உணவகங்கள் உள்ளன.

மனித நுகர்வுக்குத் தகுதியற்ற உணவை உற்பத்தி செய்யும் 18% ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அபிவிருத்தி செய்வதற்காக அவற்றை குறைந்தபட்சம் ‘B’ வகைக்கு கொண்டு வருவதற்காக தேவையான அறிவுறுத்தல்கள், ஒழுங்குபடுத்தல்கள் போன்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.

மேலும் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் நிரந்தர பணியாளர்கள் இல்லாததால் அவற்றின் தரத்தை மேம்படுத்துவதில் நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்வதாக அவர் கூறினார்.

‘சம்பளப் பிரச்சினைகள் போன்ற பல்வேறு காரணங்களால் அந்த இடங்களில் உள்ள ஊழியர்கள் தொடர்ந்து மாற்றப்படுகிறார்கள். இதன் காரணமாக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கவும், சுகாதார சோதனைக்குட்படுத்தவும் எம்மால் முடியவில்லை,’ என்றும் அவர் கூறினார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...