பிரதமரிடம் கையளிக்கப்படுகின்றது தேசிய எல்லை நிர்ணய குழு அறிக்கை!

Date:

தேசிய எல்லை நிர்ணய குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை இன்று (செவ்வாய்கிழமை) பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்படவுள்ளது.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான எல்லைகளை நிர்ணயம் செய்வதற்கான தேசிய எல்லை நிர்ணய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

 

மாவட்ட மட்டத்திலும் பல்வேறு தரப்பினராலும் ஆணைக்குழுவினால் பெறப்பட்ட முன்மொழிவுகள் மதிப்பீடு செய்யப்பட்டு மாவட்ட மட்டத்தில் எல்லை நிர்ணயம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

 

ஆணைக்குழு தனது இறுதி அறிக்கையை மார்ச் 31ஆம் திகதிக்குள் கையளிப்பதற்கு எதிர்பார்த்துள்ளது.

Popular

More like this
Related

ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பு இரத்து!

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...

துமிந்த திஸாநாயக்கவுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்!

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு வரும் 22 ஆம் திகதி!

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக...

மின்னேரியாவில் பேருந்து விபத்து: 22 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில், மின்னேரியாவின் 7 ஆவது மைல்கல்...