புதிய கலால் சட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Date:

புதிய கலால் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மது மற்றும் புகையிலை பயன்பாடு, தொடர்புடைய வணிகங்களை ஒழுங்குபடுத்துதல், உரிய உரிமங்கள் வழங்குதல் மற்றும் வரி விதிப்பு ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்காக தற்போதைய கலால் சட்டம் 1912 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதனை தற்காலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் இது தொடர்பான பிரேரணை முன்மொழிவாக முன்வைக்கப்பட்டதுடன், அதற்கமைய சட்ட வரைவை தயாரிப்பதற்கு வரைவு தயாரிப்பாளருக்கு ஆலோசனை வழங்க அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதிக்கான திகதி அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி எதிர்வரும்...

பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சு தீர்மானம்!

2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்காதிருக்க கல்வி அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டினுள்...

கிழக்கு, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும்

இலங்கையின் கிழக்கில் உருவாகியுள்ள குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் காரணமாக, கிழக்கு,...