மருந்து தட்டுப்பாடு குறித்து மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Date:

நாட்டில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பானது மக்களின் மனித உரிமை மீறல் செயற்பாடாகும் என குறிப்பிட்டு சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்ய மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான பதிப்புகளுக்கு சுகாதார அமைச்சகத்துக்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.

குறித்த மனுவில் பிரதிவாதிகளாக சுகாதார செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரசபை ஆகிய பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டின் பொது சுகாதார சேவை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...