மின்வெட்டு இருக்காது: இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றத்தில் உறுதி!

Date:

இன்று மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டு இருக்காது என எரிசக்தி அமைச்சின் செயலாளர் மின்சார சபை மற்றும் ஏனைய தரப்பினர் வழங்கிய ஒப்பந்தத்தை மீறியமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது

பரீட்சை காலத்தில் வரை மின்வெட்டு இருக்காது என இலங்கை மின்சார சபை உச்ச நீதிமன்றில் உறுதியளித்துள்ளது.

பிரிதி பத்மன் சூரசேன,  யசந்த கோதாகொட மற்றும்  ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இலங்கை மின்சார சபை மற்றும் ஏனைய தரப்பினர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், முறைப்பாடு தொடர்பில்  ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால், மனு நாளை (3) அழைக்கப்படும் என நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இது அவசரமான விடயம் என்பதால், ஒத்திவைப்பது பொருத்தமானதல்ல என நீதிபதி யசந்த கோதாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனுவை வாபஸ் பெற்றபோது, ​​நாளை மறுநாள் மனு பரிசீலிக்கப்படும் வரை மின்சாரத்தை  துண்டிக்க மாட்டோம் என மின்சார சபை  உச்சநீதிமன்றத்தில் உறுதிமொழி அளித்தது.

Popular

More like this
Related

பேரிடரால் சேதமடைந்த மத ஸ்தலங்களை கட்டியெழுப்ப ஹஜ் குழுவிடமிருந்து ரூ. 5 மில். நன்கொடை

அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவால் பாதிக்கப்பட்ட மத ஸ்தலங்களின் மறுசீரமைக்கும் பணிகளுக்காக,...

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை எதிர்பார்ப்பு

இலங்கையில் அடுத்த சில நாட்களுக்கு, குறிப்பாக பெப்ரவரி 10 வரை கனமழை...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை!

மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி,தெற்கு மற்றும் சப்ரகமுவ...

பேரிடரால் பாதிக்கப்பட்ட தொழில்துறைக்கு ரூ. 200,000 வழங்க முடிவு!

அண்மைய பாதகமான வானிலையால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் அவசர...