வெளிநாட்டுப் பயணங்களின் போது அரச உயர் அதிகாரிகளுக்கு கிடைக்கும் ஆடம்பர வசதிகளுக்கு ஆப்பு!

Date:

ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களின் போது வணிக வகுப்பில் பயணிப்பதைத் தடைசெய்து விசேட சுற்றறிக்கையை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த சுற்றறிக்கை இந்த வாரத்திலேயே வெளியிடப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சின் செயலாளர்கள், அமைச்சரவை செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் உத்தியோகபூர்வ அரசாங்க வெளிநாட்டு பயணங்களின் போது வணிக வகுப்பு வசதிகளை அனுபவிக்கும் உயர் அரசாங்க அதிகாரிகளாவர்.

நாட்டின் மோசமான நிதி நிலைமையினால் மக்கள் அவதியுறும் வேளையில் அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பும் அவசியமானது.

எனவே அரசாங்கத்தின் செலவீனங்களைக் குறைக்கும் கொள்கைக்கு அமைவாக அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்படும் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வெளிநாட்டு பயணங்களின் போது அரச உயர் அதிகாரிகள் தங்கும் ஹோட்டல்களுக்கும் இந்த சுற்றறிக்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...