கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்ட போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட அடக்குமுறைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இன்று (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பு – பௌத்தாலோகமாவத்தையில் அமைந்துள்ள இலங்கைக்கான ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இராணுவத்திற்கு எதிராக கரண்டுப்பொழுவு போராட்டம், பாடசாலை மாணவர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசி, பல்கலைக்கழகங்களை பொலிஸார் தாக்கியமையும் அந்த போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பில் தும்முல்லை சந்தி, கொழும்பு பல்கலைக்கழகம் உட்பட பல இடங்களில் இன்று காலை முதல் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.