அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இன்று முக்கிய கலந்துரையாடல்

Date:

தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட இன்று கூடவுள்ளது.

மேலும் அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேரணை மற்றும் ஜனாதிபதியுடன் அடுத்தவாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பிலும் பேச்சு நடத்தவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்த வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் இன்று காலை 08 மணியுடன் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுளளது.

இதேவேளை, புகையிரத தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதன் காரணமாக இன்றைய நேர அட்டவணையின்படி ரயில்களை இயக்க முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த புகையிரத தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் பணிப்புறக்கணிப்பை முடித்துக்கொண்டன. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையை வாபஸ் பெறுதல், மின் கட்டணக் குறைப்பு, வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தல் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் நேற்று தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...