அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், இன்று முக்கிய கலந்துரையாடல்

Date:

தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட இன்று கூடவுள்ளது.

மேலும் அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேரணை மற்றும் ஜனாதிபதியுடன் அடுத்தவாரம் நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பிலும் பேச்சு நடத்தவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்த வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் இன்று காலை 08 மணியுடன் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுளளது.

இதேவேளை, புகையிரத தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதன் காரணமாக இன்றைய நேர அட்டவணையின்படி ரயில்களை இயக்க முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த புகையிரத தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் பணிப்புறக்கணிப்பை முடித்துக்கொண்டன. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையை வாபஸ் பெறுதல், மின் கட்டணக் குறைப்பு, வங்கி வட்டி விகிதங்களைக் குறைத்தல் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் நேற்று தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

Popular

More like this
Related

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...

இன்று உலக மது ஒழிப்பு தினம்!

மது அருந்துவதால் உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள்...

பாடசாலை பிளாஸ்டிக் பொருட்களுக்கு SLS சான்றிதழ் கட்டாயம்

2026 ஏப்ரல் 1 முதல் பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தும்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 (2026) க.பொ.த சாதாரண தரப் (O/L) பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான ஒன்லைன்...