இன்று கொழும்பில் 10 மணிநேர நீர்வெட்டு!

Date:

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றைய தினம் 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று (25) காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக அம்பத்தலே நீர் விநியோக நிலையத்திற்கான மின் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளமையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை மற்றும் கடுவல மாநகர சபைகளுக்கு உட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக, கொட்டிகாவத்தை – முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களிலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...