இன்று மாலை இயக்கப்படவுள்ள ரயில் சேவைகள்!

Date:

ரயில்பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று (15) பிற்பகல் 9 புகையிரதங்கள் மாத்திரம் இயங்கும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் தெரிவித்தார்.

இதன்படி, பிரதான மற்றும் வடக்கு வழித்தடங்களில் 4 புகையிரதங்களும், கரையோர மற்றும் புத்தளம் மார்க்கத்தில் தலா 2 புகையிரதங்களும், களனிவெளி பாதையில் ஒரு புகையிரதமும் சேவையில் ஈடுபடவுள்ளதாக பிரதிப் பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டையில் இருந்து பிற்பகல் 2.25 மணிக்கு ரம்புக்கனை, கண்டிக்கு மாலை 5.10 மணிக்கும், கனேவத்தைக்கு மாலை 4.40 மணிக்கும், மஹவவிலிருந்து மாலை 6.00 மணிக்கும் பிரதான பாதையில் புறப்படும்.

சாகரிகா எக்ஸ்பிரஸ் ரயில் மருதானையில் இருந்து பெலியத்த வரை கரையோரப் பாதையிலும் மாலை 5.25 மணிக்கும் காலி வரையிலும், புத்தளம் மார்க்கத்தில் கொழும்பு கோட்டையிலிருந்து ஹலவத்தை வரை மாலை 4.30 மற்றும் 5.30 க்கும், களனிவெளி மார்க்கத்தில் அவிசாவளைக்கு மாலை 5.00 மணிக்கும் இயக்கப்படும்.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...