இன்று முதல் நாடளாவிய ரீதியில் போராட்டம்!

Date:

இன்று(09) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தின் முறையற்ற வரிக்கொள்கைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர்.

அதற்கமைய தொழிற்சங்களினால் வழங்கப்பட்ட ஒருவார கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் , அரசாங்கத்தினால் எவ்வித பதிலும் வழங்கப்படாமையினால் இன்றிலிருந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட அவை தீர்மானித்துள்ளன.

இதனால், இன்று முதல் பல துறையின் சேவைகள் முற்றாக முடங்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...