இலங்கைக்கான நிதியுதவியை சர்வதேச நாணய நிதியம் அங்கீகரித்தது!

Date:

இலங்கையின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பிணை எடுப்புப் பொதிக்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க  உறுதிப்படுத்தினார்.

ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்துதெரிவிக்கும் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய சர்வதேச பங்காளிகளின் ஆதரவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

“இலங்கைக்கு  7 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான நிதியுதவியை அணுக உதவும் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ் இலங்கையின் திட்டத்திற்கு IMF நிறைவேற்று  சபை ஒப்புதல் அளித்துள்ளது.

நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வழங்குநர்களுடனான அனைத்து விவாதங்களிலும் முழு வெளிப்படைத்தன்மை மற்றும் நிலையான நிலையை அடைவதற்கு ஜனாதிபதி உறுதியளித்தார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...