சவூதி அரசாங்கத்தினால் இலங்கைக்கு உலர் உணவுப் பொதிகள் அன்பளிப்பு!

Date:

இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கான உலருணவுப் பொதிகள் சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

இந்த உலருணவுப் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் அல் கஹ்தானி தலைமையில் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் நேற்றையதினம் (28)  இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம் பைசல் மற்றும் உதவிப் பணிப்பாளர் எம.எல்.எம். அன்வர் அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.
இதேவேளை, இந்த நன்கொடைத் திட்டமானது சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார, தஃவா மற்றும் வழிகாட்டல் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் ஊடாக தகுதியான மக்களுக்கு இந்த உணவுப் பொதிகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸினால் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...