சோமாலியாவில் தற்கொலை படை தாக்குதல் : 5 பேர் பலி -11 பேர் படுகாயம்!

Date:

கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவின் ஜூபலாந்து மாகாணம் பர்டேரா பகுதியில் அரசாங்க விருந்தினர் மாளிகை உள்ளது. இங்கு அரசாங்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது அந்த மாளிகைக்குள் திடீரென ஒரு வாகனம் அனுமதியின்றி உள்ளே நுழைந்துள்ளது. வெடி பொருட்கள் பொருத்தப்பட்ட அந்த வாகனத்தில் இருந்தவர் உள்ளே நுழைந்ததும் தன்னைத்தானே வெடிக்கச் செய்துள்ளார்.

இதில் அந்த வாகனத்தில் இருந்தவர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த தற்கொலை படை தாக்குதலில் 11 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இருப்பினும் அல்-ஷபாப் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தற்கொலை படை தாக்குதலை நடத்தி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் எழுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...