தனது வீடு எரிக்கப்பட்டமை குறித்த விசாரணை தாமதம்: கவலையுடன் கடிதம் அனுப்பிய அமைச்சர்!

Date:

கடந்த வருடம் மே மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அமைதியின்மையின் போது உடுகம்பலையில் உள்ள தனது வீடு எரிக்கப்பட்டமை தொடர்பான முறைப்பாட்டினை விசாரணை செய்வதில் தாமதம் ஏற்பட்டமை தொடர்பில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கவலை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விரைவில் ஆஜராகுவதற்கான திகதி மற்றும் நேரத்தை வழங்குமாறு நான்கு தடவைகள் எழுத்து மூலம் கோரியுள்ளதாக அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கான சந்தர்ப்பத்தை விரைவில் வழங்குமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தனது கடிதத்தில் மேலும் கோரியுள்ளார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...