தாய்லாந்தில் காற்று மாசு அதிகரிப்பு: 2 இலட்சம் பேர் மருத்துவமனையில்

Date:

தாய்லாந்தில் காற்று மாசுபாடு கணிசமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனைக் கருத்திற் கொண்டு கடந்த வாரத்தில் மாத்திரம் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் கிட்டத்தட்ட 02 இலட்சம் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தாய்லாந்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து இதுவரை 1.1 மில்லியன் மக்கள் காற்று மாசுபாடு காரணமாக பல்வேறு நோய்களுக்கு ஆளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

சுமார் 11 மில்லியன் மக்கள்தொகை கொண்ட உலகின் முன்னணி சுற்றுலா நகரமாக திகழும் தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கின் வானம் மஞ்சள் மற்றும் சாம்பல் புகையால் மூடப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தாய்லாந்தில் காற்று மாசுபாட்டிற்கு போக்குவரத்து புகை, கரியமில வாயு மற்றும் நிலத்தை எரிப்பது ஆகியவை முக்கிய காரணிகளாகும்.

பாங்காக்கில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தால் தொடர் அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்படி, மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும்போது தரமான முகமூடியை அணியுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகள் முடிந்தவரை வீட்டுக்குள்ளேயே நேரத்தைச் செலவிடுவது அவசியம் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Popular

More like this
Related

ஹிஜ்ரி 1448 புத்தாண்டு வழங்கும் செய்தி: இடப்பெயர்வின் வரலாறும் நாட்காட்டியின் முக்கியத்துவமும்!

-Ash-sheikh Hassan Sulaiman (Naleemi) - (fb) காலச்சக்கரத்தின் சுழற்சியில் மற்றுமொரு ஹிஜ்ரி...

கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார,...

தீவிரமடையும் டெங்கு பரவல்: நாடு தழுவிய ரீதியில் விசேட ஒழிப்பு நடவடிக்கை!

டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காம் நாள் இன்றாகும். இன்றைய தினம் அனைத்து...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் மழை: மீனவர்களுக்கும் எச்சரிக்கை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...