தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டரின் மரண விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது!

Date:

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான  விசாரணையை எதிர்வரும் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதவான் டி. என். இளங்கசிங்க உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று  (22) மீண்டும் நீதிமன்றில் அழைக்கப்பட்ட போதே இந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்த மரணம் தற்செயலானதா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க ஐவரடங்கிய விசேட வைத்திய சபையொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இது நீண்டகால விசாரணையாக மாறியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி  அனுஜ பிரேமரத்ன தெரிவித்தார்.

இதனடிப்படையில், இந்த சம்பவத்தை முன்வைக்கும் முன்னோடி நீதிபதி முன்னிலையில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக வழக்கை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக மேலதிக நீதவான் உத்தரவிட்டார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...