நஷ்டத்தில் இயங்கும் அரச தொழில் துறைகள் மூடப்படும்: அமைச்சர் பந்துல குணவர்தன!

Date:

நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மூடுவது அல்லது மறுசீரமைப்பது போன்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு நீண்ட கடன் வசதியை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“இந்த ஒப்பந்தத்தின்படி, அனைத்து அரச பொதுத்துறை நிறுவனங்களும் நஷ்டம் அடைவதாக இருந்தால், நஷ்டத்தில் இயங்கும் தொழில் துறைகள் மூடப்படும். நாம் எவ்வளவு விரும்பினாலும், பிடிக்காவிட்டாலும், இலாபத்தை ஈட்ட முடியாது என்றால், அந்த தொழில்கள் மூடப்படும் நிலையில் நாம் உள்ளோம்.

செலவை ஈடுகட்ட முடியாவிட்டால் முன்னர் அரசு பணம் தருவார்கள். கடன் வாங்க முடியாவிட்டாலும் அரசு பணத்தினை அச்சடித்தாவது தருவார்கள். இனிமேல் இந்த இரண்டையும் செய்ய முடியாது. இந்த யதார்த்தத்தை எதிர்கொண்டு, CTB யை மீட்கும் திட்டம் இல்லாவிட்டாலும், அந்தத் துறையில் மூடப்படும் பகுதியானது தனியாருக்கு கொடுப்பதுதான் நடக்கும்.”

 

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...