பண்டாரவளையில் மண் சரிவு: 6 பேர் காயம்!

Date:

பண்டாரவளை – பூனாகலை, கபரகலையில் தொடர் குடியிருப்புகளில் நேற்றிரவு மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த 6 பேர் (3 பெண்கள், 3 ஆண்கள்) உடனடியாக பொதுமக்களால் மீட்கப்பட்டு கொஸ்லாந்தை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என அனர்த்த முகாமை நிலையத்தினர் தெரிவித்தனர்.

கடைகள் மற்றும் குடியிருப்புகள் என 4 கட்டிடங்கள் முற்றாகவும், 20 கட்டிடங்கள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

இரண்டு தொடர் குடியிருப்புகளைச் சேர்ந்த 220 பேர் பூனாக்கலை தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...

ஷானி உள்ளிட்ட 3 பேரின் மனுக்களை விசாரிக்க அனுமதி!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, திணைக்களத்தின் முன்னாள் பொலிஸ்...

பொல்கஹவெல அல் இர்பானில் ஊடகக் கழகம் ஆரம்பம்

பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரியில் பாடசாலை ஊடகக் கழகம் ஆரம்பித்து...