மகிழ்ச்சியான நாடு : 6வது முறையாகவும் முதலிடம் பிடித்தது பின்லாந்து!

Date:

உலக மகிழ்ச்சி தினம் ஆண்டுதோறும், மார்ச் 20-ம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றது.

இதையொட்டி நேற்று முன்தினம் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.நா சபையின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு வெளியிட்டுள்ளது.

வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லாமை ஆகிய காரணிகள் அடிப்படையில் பல்வேறு நாடுகளில் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது.

இந்நிலையில், இந்தப் பட்டியலில் தொடர்ந்து 6-வது ஆண்டாக ஐரோப்பிய நாடான பின்லாந்து முதலிடத்தில் உள்ளது.

டென்மார்க், ஐஸ்லாந்து ஆகியவை முறையே 2, 3-ம் இடத்தைப் பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா 125-வது இடத்தில் நீடித்துள்ளது.

அண்டை நாடுகளான நேபாளம், சீனா, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளை விட இந்தியா பின்தங்கியுள்ளது.

தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Popular

More like this
Related

35000 மெட்ரிக் தொன் எரிபொருள் கப்பல் நாட்டிற்கு

35000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோல் அடங்கிய கப்பலொன்று இன்று...

35 லிட்டர் பெற்றோலை கோரும் முச்சக்கர வண்டி சாரதிகள்: ஒதுக்கீடு அதிகரிக்கப்படாவிட்டால் போராட்டம்

QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் மேலாண்மை அமைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட எரிபொருள்...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை

இன்றையதினம் (16) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மாகாணங்களிலும்...

QR குறியீட்டை பழைய பயனர்கள் தடையின்றிப் புதுப்பித்துக் கொள்ளலாம்!

ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் தற்போதும் அதே வாகனம்...