மார்ச் மாதத்தில் 53,000 சுற்றுலாப் பயணிகள் வருகை!

Date:

மார்ச் மாதத்தில் இதுவரை 53,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதன்படி மார்ச் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 53 ஆயிரத்து 838 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளே அதிகம் என்றும் குறிப்பாக 12 ஆயிரத்து 762 ரஷ்ய பிரஜைகள் இலங்கை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தியாவில் இருந்து 7,348 சுற்றுலாப் பயணிகளையும், ஜேர்மனியில் இருந்து 4,289 பேரும், பிரித்தானியாவில் இருந்து 3,937 பேரும், அமெரிக்காவிலிருந்து 2,716 பேரும் இலங்கை வந்துள்ளனர்.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் மொத்தமாக 264,022 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...