முன்னாள் சபாநாயகருக்கு பாராளுமன்றத்தில் நாளை அஞ்சலி!

Date:

இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் ஜோசப் மைக்கேல் பெரேராவின் பூதவுடல் நாளை (30) காலை 9.00 மணியளவில் பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை பாராளுமன்றத்திற்கு முன்பாக உள்ள விசேட சம்பிரதாய மண்டபத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

ஜோசப் மைக்கேல் பெரேரா இலங்கை பாராளுமன்றத்தின் 17வது சபாநாயகராவார். 2001 முதல் 2004 வரை சபாநாயகராக பணியாற்றினார்.

பல அரசாங்கங்களில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் மற்றும் தொழிலாளர் உட்பட அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வகித்த பெரேரா ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...