மூன்றாவது முறையாக சீன ஜனாதிபதியாக பதவியேற்றார் ஜி ஜின்பிங்!

Date:

சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் பதவியேற்றார் .

தேசிய மக்கள் காங்கிரசின் ஏறக்குறைய 3,000 உறுப்பினர்கள் ஒருமனதாக அவருக்கு வாக்களித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவரை எதிர்த்து எவரும் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், சீனாவின் மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவராகவும், ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சீன பாராளுமன்றத்தின் தலைவராக ஜாவோ லெஜியும், புதிய துணை ஜனாதிபதியாக ஹான் ஜெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தொடர் வெற்றிகளுடன், சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக ஜி ஜின்பிங் மாறி வருகிறார்.

இரண்டு முறை மட்டுமே ஜனாதிபதியாக முடியும் என்ற வரம்பை கடந்த 2018-ம் ஆண்டு ஜி ஜின்பிங் நீக்கி இருந்தார். இதன் அடிப்படையில் ஜி ஜின்பிங் மூன்றாவது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...