ரோகிதஷவின் கடன் அட்டையை திருடி 400 அமெரிக்க டொலர்கள் வரை மோசடி!

Date:

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் கடன் அட்டையில் இருந்து கிட்டத்தட்ட 400 அமெரிக்க டொலர்கள் மோசடியான முறையில் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாரஹன்பிட்டிய பொலிஸார், நீதிமன்றத்தில் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளனர்.
நபர் ஒருவர் ரோகித ராஜபக்சவின் கடன் அட்டையை பயன்படுத்தி நான்கு பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ரோஹித ராஜபக்ஷ கடந்த 3ஆம் திகதி மாத்தறையில் உள்ள வீடொன்றுக்கு சென்று கொண்டிருந்த போது தனது கடன் அட்டை காணாமல் போனதாக நாரஹேன்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, சம்பந்தப்பட்ட தனியார் வங்கியின் தலைமை அலுவலக மேலாளருக்கு உரிய வங்கிக் கணக்கு அறிக்கைகளை வெளியிட உத்தரவிட வேண்டும் என போலீஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

வடக்கு-கிழக்கில் இன்று ஹர்த்தால்!

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று திங்கட்கிழமை (18) காலை...

பாடசாலை மூன்றாம் தவணை இன்று ஆரம்பம்!

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான 2025 ஆம்...

நாட்டின் பல பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...