வரிக்கொள்கைக்கு எதிராக நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கை !

Date:

அரசாங்கத்தின்  வரிக்கொள்கைக்கு எதிராக நாளை (09) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர்.

இதேவேளை, ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கத்தினரால் இன்று காலை 6.30 முதல் நாளை (09) காலை 6.30 வரை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை இரத்து செய்தமை உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து, ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கத்தினர் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மருந்தாளர்கள், கதிரியக்க நிபுணர்கள், தாதி உதவியாளர்கள், அம்பியூலன்ஸ் சாரதிகள் உள்ளிட்ட கனிஷ்ட நிலை சுகாதார ஊழியர்களே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இன்றைய பணிப்பகிஷ்கரிப்பில் வைத்தியர்களும் தாதியர்களும் கலந்துகொள்ளவில்லை.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...