வரிக்கொள்கைக்கு எதிராக நாளை முதல் தொழிற்சங்க நடவடிக்கை !

Date:

அரசாங்கத்தின்  வரிக்கொள்கைக்கு எதிராக நாளை (09) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் தொழில் வல்லுநர்களின் ஒன்றிணைந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர்.

இதேவேளை, ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கத்தினரால் இன்று காலை 6.30 முதல் நாளை (09) காலை 6.30 வரை பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை இரத்து செய்தமை உள்ளிட்ட சில விடயங்களை முன்வைத்து, ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கத்தினர் அடையாள பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மருந்தாளர்கள், கதிரியக்க நிபுணர்கள், தாதி உதவியாளர்கள், அம்பியூலன்ஸ் சாரதிகள் உள்ளிட்ட கனிஷ்ட நிலை சுகாதார ஊழியர்களே பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும், இன்றைய பணிப்பகிஷ்கரிப்பில் வைத்தியர்களும் தாதியர்களும் கலந்துகொள்ளவில்லை.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...