வரி செலுத்தத் தவறிய நபர்களை கண்டுபிடிக்க வலை வீச்சு!

Date:

வருமானத்தைக் காட்டாமல் வரி செலுத்தத் தவறிய சில தொழில்களில் ஈடுபடும் நபர்களை அடையாளம் காண உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்துக்கு அறிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுடன் நிதியமைச்சில் நேற்று (01) இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது, ​​பொது வருவாயில் அதிக கவனம் செலுத்தப்படும் போது, ​​வரி விதிப்பு, வருவாய் வசூல் மற்றும் வரி ஏய்ப்பாளர்களை அடையாளம் காணவும் கவனம் செலுத்த வேண்டும்.

வரி வருவாய் அறவீடு தொடர்பான பிரச்சினைகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது. அதிகாரிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

இது தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் சியம்பலாபிட்டிய, உள்நாட்டு இறைவரி திணைக்கள மட்டத்தில் உரிய நபர்களைக் கையாள்வதற்கான உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் முறைமையொன்றைத் தயாரிக்குமாறு பணிப்புரை வழங்கினார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...