வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கு நிதி இல்லை: அரச அச்சகர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பு!

Date:

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான நிதி இதுவரையிலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என அரசாங்க அச்சகர் கங்காணி கல்பனா லியனகே தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

அத்தோடு, தற்போது வரை அச்சிடப்பட்டுள்ள தபால்மூல சீட்டுகளையும் வழங்க முடியாதுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

இதுவரையில் 10 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டு பாதுகாப்பு களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அச்சகர் கங்காணி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

எனினும், அவற்றைக் கட்டுகளாக தயார் செய்து பொலிஸ் பாதுகாப்பில் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை இன்னும் நிறைவடையவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...