விமான நிலையத்திற்கு பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பாடசாலை மாணவன்!

Date:

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில், பொய்யான வெடிகுண்டு மிரட்டல் விடுத்து அழைப்பு விடுத்த 14 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலை மாணவர் நேற்று (25) BIA அவசர அழைப்புப் பிரிவுக்கு அழைப்பு விடுத்து வெடிகுண்டு இருப்பதாகக்  கூறியுள்ளார்.

அதிகாரிகள் முனையத்தை சோதனை செய்தபோது, ​​சில நிமிடங்களில் மாணவர் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெடிகுண்டு மிரட்டல் இல்லை என்றும் அது நகைச்சுவை என்றும் தெரிவித்தார்.

களுபோவில பிரதேசத்தில் வசிக்கும்  பாடசாலை மாணவனை வரவழைத்த பொலிஸார், பின்விளைவுகளை உணராமல்  அழைப்பு குறித்து வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இதனையடுத்து குறித்த மாணவனை  கடுமையாக கண்டித்து, தான் செய்த செயலின் தீவிரம் தனக்கு தெரியவில்லை என பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்ததையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...